கோவைப் பூ (226-250)
தென்றலின் விசுவாசம்
தேன்சுவை
கனிகளின் உல்லாசம்-
காற்று-பணப்பாசம். (226)
இரவில்
பிறந்துவிட்டேன்
வெளிச்சத்தில்
வாழ்வதற்காக-
பாலில்
உலாவும் 'நெய்'. (227)
படுதாப்
போர்வைக்குள்
முகக்கோலம்
காட்டும் மாந்தர்-
கண்
மூடிய 'பூனை'. (228)
ஆர்ப்பாட்டமாய்
வாழ்ந்தவன்
வயது
முதிர்ந்து படுக்கையில்-
நீர்நிறையும்
குடத்தொலி. (229)
தென்னை
மரத்தின் நிழல்
மாடியைச்
சுத்தம் செய்கின்றது-
தூசு
களையவில்லை. (230)
ஆழத்
தோண்டினால்தான்
குடிப்பதற்கு
ஊற்றுநீர் கிடைக்கும்-
உலகத்தில்
'பரம்பொருள்'. (231)
தொடர்ந்து
நெய்தாலும்
துணிக்குக்
குறியீடு அவசியம்-
வரையறுத்த
வாழ்க்கை. (232)
ஆசான்
இல்லாத
பள்ளிக்கூடங்கள்; அடடே...
நீரில்லாக்
கிணறு. (233)
கலங்காத
ஒற்றுமை
முட்டைக்குள்
வெள்ளை,
மஞ்சள்...
அடடே...
கூழ்முட்டை? (234)
ஆசையின்
தோரணங்கள்
திக்கெல்லாம்
காற்றின் போக்கு-
ஓர்
இடத்தில் முடிச்சு. (235)
தொல்லையே
தந்தாலும்
எப்பொழுதுமே
விடமாட்டார்;
அட...
முள்ளுள்ள
ரோசா. (236)
அழவும்
முடியவில்லை
அடிக்கவும்
முடியவில்லை;
பாவம்
கருவறையில்
குழந்தை. (237)
நிர்ணயிக்கப்
போவதும்
நிச்சயிக்கப்படுவதும்
அவர்கள்-
திருமணத்தில்
அய்யர்? (238)
அழித்தா
விடுகின்றோம்
விரட்டி
மட்டும் விடுகின்றோம்-
சோற்றின்
மீது 'ஈ'. (239)
கடல்
மட்டும் அலையா?
நீருள்ள
இடமெல்லாம்-அட....
குப்பிக்கேற்ற
மூடி. (240)
அரிசி கழுவிய நீர்
தினந்தினமுஞ்
சேரப் புளிக்கும்-
மாட்டுக்குத்
தண்ணீர். (241)
நாடக
அரங்கத்தில்
துரியோதனர்கள்
நடிக்கிறார்கள்-
எரிகின்ற
வீடு? (242)
அலங்காரச்
சுவரில்
அமர்ந்திருக்கும்
சிறு கண்ணாடி-
நடுத்தெருப்
பிள்ளையார். (243)
குறுக்கத்தரித்த
உரு
காட்டாற்று
வெள்ளம்;
அடடே...
ஐக்கூக்
கவிதைகள். (244)
நிமிர்ந்தால்
தலைபடுமென
சாய்ந்திருக்கும்
நாற்றுகள்-ஆம்...
மணக்கோலத்தில்
'பெண்'. (245)
பூவை
நாடும் பூ
பறிப்பதால்
பூவிற்கு வாட்டம்-
செடியில்
இருந்தாலும்.? (246)
நிலக்கடலையில்
எண்ணை
காய்ந்த
பின்பே எடுக்கவேண்டும்-
மழலையர்
திருமணம்? (247)
நிழலான
வாழ்க்கை
நிஜமாவதாய்
உணர்வின் அலைகள்-
திரையரங்கில்
'மக்கள்'. (248)
சுவரில்
கண்ணாடி
சுவரைக்
காட்டுவதில்லை-அட ...
உனக்குள்ளே
ஒருவன். (249)
நிழலில்லாத
இடம்
மழைபெய்தால்
முற்றும் நனையும்-
கருத்துகள்
கருத்துரையிடுக