கோவைப் பூ (151-175)
கொக்கரிக்கும்
தவளை
பாம்பின்
உல்லாச வாழ்க்கை-
மகிழ்ச்சியின்
ஊடுருவல். (151)
குனிந்து
நிமிர்கின்றது
கொத்துக்கொத்தாய்
அவரைக்காய்
இரும்பு
உருக்காலை. (152)
கூட்டு
வாழ்க்கையில்
குதூகலம்
ஆரோகனம்;
அடடா!
தனிமையில்
'ஞானம்'. (153)
கூர்மையான
கத்தி
விளிம்பில்
இரத்தக்கரை;
அடடே...
சிரிக்கும்
சாணைக்கல். (154)
கூர்
மழுங்கிய கத்தி
பட்டை
தீட்டப்படுகிறது-
அந்திக் கதிர்வீச்சு. (155)
தொடர்ந்து
கல் எறிந்தேன்
ஏமாற்றம், பொறுமையாக....
அடடே....
விழுந்தது 'கனி'. (156)
குப்பையை
மட்டுமா?
தானியக்
குவியலையும் சிதைக்கும்-
இரைதேடும்
கோழி. (157)
கூவக்கரை
வீடு
தினமொரு
அலங்காரம் காணும்
அதிகாரிகள்
பேச்சு. (158)
குறுக்கிடாமல்
இருக்க
பாதை, நடுவில் தடுப்புக்கம்பி-
அடியில்
வளரும் செடி. (159)
கொடியில்
மணக்கும்மலர்
காற்றால்
காற்றும் மணக்கின்றதே
நாற்றாகும்
'பெண்கள்'. (160)
கிணற்றுக்குள்
தவளை
எவ்வளவு
தூரம் நீந்தும்?
அட...
கொட்டைக்குள் விதை.(161)
மயக்கும்
வண்ணத்தில்
அட்டையில்
சித்திரம்,
உள்ளே-
அழுகின்றது
'செந்தமிழ்'. (162)
கிளையில்
குதித்தது அணில்
எத்தனை
இலைகள் சுமையிறக்கின-
மண்ணில்
பன்னீர்த்துளி. (163)
கொதிக்கின்ற
நீரில்
அரிசியின்
கொந்தளிப்பு,
ஆவியாய்-
குடிசைப்
போராட்டம். (164)
காலில்
முள் குத்த
மூளையில்
மின்னல் பறக்கும்-
வதந்திகளின்
வேகம். (165)
சந்தனமரக்காடு
அகில்
எரிக்க,
சந்தனம் வீசும்-
பூவொடு
சேர்ந்த நார். (166)
காலிற்கு
உணவைத்
தலையின்
கிரீடம் கொடுக்கும்-
உரமாய்
நிற்கும் சுவர். (167)
வேர்க்கும்
நிலத்திற்கு
வானம்
அழுதேயாகவேண்டும்-
முரண்பாட்டு
வாழ்க்கை. (168)
காதில்
கேளாஒலி
எனக்கு
மட்டுமெப்படி கேட்டது?
எனக்குள்
'மனசாட்சி'. (169)
சமுதாயக்
கைகளில்
சத்தியாக்கிரகத்
துப்பாக்கி-
எறும்பைச்
சுடுவதற்கு. (170)
காப்பாற்ற
வேண்டும்
ஆபத்தான
உண்மைகள்-
பாவம், சிறைக்கைதிகள். (171)
சாலையில்
விழுதுகள்
அவதிப்படுமே
பேருந்து-
ஆலமரத்தரசியல். (172)
கழுத்திலே
மாங்கல்யம்
வெண்ணாடை
எதற்கு உடுக்கிறாள்?
ஓ...
பிள்ளைத்தாய்ச்சி. (173)
பாதம்
குத்திய முள்
முறைதவறி
செல்லும்போது-
கைக்குள்
சிறைபடுமா? (174)
களைகின்ற
சுவடுகள்
இளவேனிற்
காலம்;
பாவம்....
மணல், என்ன செய்யும்? (175)
கருத்துகள்
கருத்துரையிடுக