கோவைப் பூ (726-750)
ஒத்திகை முடிந்தவுடன்
அரங்கம் அதிர
ஆடுகிறாள்-
முழுநிலா அரங்கேற்றம். (726)
சாலையோரத்தில்
தினந்தினம்
இன்னிசைக் கச்சேரி-
அட்சய பாத்திரம்
பாழ். (727)
சில்லரை காசுக்காக
சாலையோரம்
தவமிருப்பான்-
கரித்துண்டு
ஓவியன். (728)
கோஷ்டி பூசல்களால்
ஒத்தியொத்தி
வைக்கப்பட்டது-
அட… அமைதிப்
பேரணி. (729)
மலையகத்தின்
இரத்தம்
உலகெங்கும்
இரத்த ஆறு-
சிரிக்கிறது
தேயிலை. (730)
நொடிப்பொழுது
பெருமழை
அனைத்து இன
மதங்களும் சங்கமம்-
பரமபத வாழ்க்கை. (731)
பெருமழை வெள்ளத்தில்
யாருக்கும்
தள்ளுபடியில்லை-
அரசனும் ஆண்டியாக. (732)
விழுதுகளை
நம்பி
கிளைகளை விட்டது
ஆலமரம்-
பாவம், ஆலம்
வேர். (733)
சுத்தமாய்
வந்த நீர்
குப்பையாய்
மீண்டு செல்லும்-
தத்திவரும்
வெள்ளலை. (734)
அடர்த்தியான
காடு
கோலாகல இசைக்கச்சேரி
சருகுகளின்
ஓசை. (735)
ஏழைக் குடிசையில்
நிறைவான கொண்டாட்டங்கள்
நடை பழகும்
குழந்தை. (736)
தூளியிலே அழுகை
தாழிட்டது
கோபச்சேவல் –
தாலாட்டும்
அத்தை. (737)
காளையின் திமில்
கை மாறும்
வெற்றிக் கோப்பை-
கண் கொத்திப்
பாம்பு. (738)
வேர்களை நம்பாமல்
விழுதுகள்
ஊன்றும் ஆலமரம்-
விழுதெல்லாம்
வேர்களா? (739)
வரிசை மாறியதால்
நேராய்க் கடிக்கும்
கட்டெறும்பு –
அட… சுரங்கப்
பாதை. (740)
காற்றில் பூவாசம்
வீடே குதூகலத்தில்
இருக்கும்-
பூந்தோட்டக்காரன்? (741)
போர்க்களமானதுக்கு
யாரும் எதிர்த்துப்
பேசவில்லை-
ஏறுதழுவும்
காளை. (742)
குளத்துப்
படிக்கட்டில்
பசியாற்றிக்
கொண்டிருக்கிறது-
பசியாற்றும்
மீன்கள். (743)
வாடைக் காற்றின்
சுகம்
எங்கும் சந்தனம்
மணக்கிறது-
அட… புதுமனை
புகுவிழா. (744)
தளர்வோடு சென்றாள்
புத்துணர்ச்சியூட்டிய
அன்னதானம்-
கருவறைக் கடவுள்
யார்? (745)
குடிசையின்
ஓரம்
ஓரக்கண்களில்
வலிக்கோடுகள்-
பசிக்காய்
- பட்டது மரம். (746)
வளர்த்த கடனுக்கு
கேசாதி - பாதாதி
கேசமாய் –
அஞ்சலிக்கும்
உதிர்பூ. (747)
கழித்த பொருளெல்லாம்
ஏழைக்குக்
கூட்டலாகிறது-
தள்ளுபடி விற்பனை. (748)
ஊருக்குள்
படகு
அடர்ந்த பெருமழையின்
கோபம் –
கருத்துகள்
கருத்துரையிடுக