கோவைப் பூ (176-200)
சாலையைப் பார்த்தா
விழுதுகளின்
வீரியம்;
அடடா!
நாட்டில்
மக்களாட்சி. (176)
கரங்களில்
கடிகாரம்
எல்லாமும்
நேரத்தைக் காட்டும்
உப்பில்லா
பண்டம்? (177)
சிவக்கும்
தாம்பூலம்
தெருவில்
துப்பிச் செல்கின்றான்-
கண்ணகி
விழிக்கவில்லை. (178)
கருப்பாக
இருந்தாள்
மனைவியாக
ஏற்க மறுத்தேன்-
சுட்டது
அகல்விளக்கு. (179)
கவிதையில்
அமர்ந்தது 'நிலா'
எல்லோரும்
புகழ்ந்தே பாடுவர்-
கவிதைக்குள்ளே
'நான்'. (180)
கண்ணாடிக்
கடையும்
புயலில்
அகப்பட்டுக்கொண்டது-
கோட்டைக்
காவல்? (181)
சிறிது
நேரந்தான்
மூக்கைத்
துளைத்தது துர்நாற்றம்-
நாவினாற்
சுட்ட வடு? (182)
கண்ணாடிப்
பெட்டியில்
அலங்காரமாய்
வீற்றிருக்கின்றது-
நமைச்சுமக்கும்
செருப்பு. (183)
செடி
கொடி மரங்களென்று
எதிலும்
வேறுபாடு இல்லை-
மனிதரில்
இனக்கலப்பு? (184)
ஒற்றுமையாய்
வானம்
மகிழ்ச்சியோடு
மண்ணில் வெள்ளம்-
பாவம், மண்-மணலாய். (185)
மேகத்
திட்டுக்குள்
மோகத்
திரைகள் சிரிக்கின்றன-
விலைபேசும்
'அடுப்பு'. (186)
ஒன்பான்
சுவை ஒன்றில்
இனிக்க இனிக்க
உறவாடும்-
பிள்ளைத்தமிழ்ப்
பாட்டு. (187)
செடியில்
பழுத்த பழம்
இனிக்கவே
நித்தம் துடிதுடிக்கும்-
இல்வாழ்வில்
'மனைவி'. (188)
ஏர்-கலப்பையா
என்?
எறும்பின்
சிறுகால்கள்;
அடடே...
முயற்சியில்
புரளுமே 'மண்'. (189)
சேற்றிலே
வாழ்ந்தாலும்
தாமரைதானே
தேசியமலர்-
சிப்பிக்குள்
முத்து. (190)
ஏழு
வண்ணங்கள்
வானத்து
வெண்மைக்குள்;
அட...
பெண்மையின்
குணக்குன்றுகள்?
(191)
வெறுக்கத்தக்கவைதான்
ஒதுக்கினும்
ஒதுங்கவில்லை,
அடடா!
உடம்போடு
'அழுக்கு'. (192)
எழுதாத
எழுதுகோல்
ஊற்றிய
மை தீர்ந்துபோனது-
காற்றில்
அதன் எழுத்து? (193)
சேற்றிலே
வாழ்ந்தாலும்
தாமரைதானே
தேசியமலர்-
ஓ...
காகிதப் பூக்கள்? (194)
எழுதி
முடிந்தவுடன்
தீர்ப்பு
கிடைத்துவிடுவதில்லை-
விடைகொடுக்கும்
விமர்சனம்.(195)
தலைவர்
வந்துவிட்டார்
பூமாலைகள்
அணிசெய்தன-
குப்பையில்
மாலை. (196)
எத்தனை
முறை படித்தேன்
புரியவில்லை, என்ன செய்வது?
கிழிந்ததே
நல்லபுத்தகம். (197)
நிர்வாணத்
தறிகள்
தரணி
எங்கும் பிரவாகம்-
நெசவாளியின்
'அடுப்பு'? (198)
எப்படி
இருந்தாலும்
உயிரைக்
காப்பாற்றிக்கொள்ளும்-
சந்நியாசித்
தவளை. (199)
தலைவிரித்த
தென்னை
வாழ்விழந்து
பட்டுபோனது-
கருத்துகள்
கருத்துரையிடுக