கோவைப் பூ (276-300)

 நாணத்தின் விளைச்சலால்

நல்வாழ்க்கை கிடைத்துவிட்டது; அட....

வானம் பொழிகிறது.               (276)

 

புள்ளியில் நிறைவின்மை

எத்தனை எத்தனை எழுத்திற்கு-

மனிதப் பேராசை.                    (277)

 

பூத்திருக்கும் சோலை

உண்டுருண்டு செல்லும் வண்டுகள்-

கூந்தலில் அழகாய் 'மலர்'.       (278)

 

நான்கு திசை வேதம்

பரம்பொருளே மூல கர்த்தா-

புள்ளியில் நிற்கும் கரு.            (279)

 

பூ பூத்த நேரம்

புவியெங்கும் வெண்மை தெரிந்தது-

ஆந்தைக்குள் 'உலகு'.              (280)

 

பெண்ணால் வரும் சண்டை

உடல்முழுக்கச் சிவப்புக் கண்கள்

வெகுளியாய்ச் சிரிக்கும் அவள்? (281)

 

இருண்ட வீட்டிற்குள்

ஒளி(ர்)ந்திருக்கும் மின்மினிப் பூச்சிகள்

விபச்சார விடுதி.                      (282)

 

பெரிய கல்லையுருட்டும்

கடப்பாறை ஒரு நெம்புகோல்-

அடிதாங்கும் சிறுகல்.               (283)

 

மகனை விற்றுவிட்டு

மகளின் நிச்சயதார்த்தம்; அட...

கரம்பு நிலத்தில் நெல்.             (284)

 

பகடைக்காய் ஆட்டம்

வெற்றிதோல்வி நிரந்தரமில்லை

வாழ்வில் இன்பதுன்பம்.         (285)

 

மணலைச் சீண்டிவிட்டேன்

காற்றில் போருக்குப் போனது-

அடைக்கலம் தந்தது மழை.     (286)

 

மறுநாள் உணவிற்காக

நுனிப்புல் மேய்ந்தது ஆடு; அட....

நம்ம வழக்குரைஞர்.                (287)

 

பத்திரிகைப் பூக்கள்

காலையும் மாலையும் வரும்

வண்டுகளாய் 'வாசகர்'.           (288)

 

மனதைத் திருடினாலும்

மறைக்காமல்தான் நிற்கின்றது-

கடைக்கூண்டில் பொம்மை.   (289)

 

மிகப்பெரிய உருளை

சிறிய கல் தடுத்து நிறுத்தும்-

எதற்கெடுத்தாலும் 'பெண்'.     (290)

 

பல் மறைக்கவா உதடு

சொல் தவறினால் கடிபடும் நாக்கு

அழகே ஆபத்து.                       (291)

 

மின்சாரப் பெட்டியில்

எப்பவும் சிவப்புநிற விளக்கு-

கன்னிகளின் கண்கள்.             (292)

 

முதிர்ந்து தான் உதிரும்

உதிர்ந்த பின் புதியதாய் ஆகும்-

அட... தென்னந்துடைப்பம்.    (293)

 

பிறருக்குத் தன்னை

அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்தேன்-

வாழை மரமாய் 'நான்'.            (294)

 

முந்திச் சென்றாலும்

புகைமட்டும் பிந்தியே செல்லும்-

வேகமாய்ப் புகைவண்டி.        (295)

 

மூக்கறுத்த கத்திக்கு

முனையிலே இரத்தம் மிளிர்கின்றது-

மனம் ஓர் 'கிளிக்கூடு'.              (296)

 

முள் குத்தியவுடனே

இரத்தமும் அழுக்கும் சேர்ந்தே வரும்

முள் நுனியில் அழுக்கு.            (297)

 

மூக்கறுத்த கத்தியின்

கூர்முனையில் குருதி ஓட்டம்-

மூச்சு நிற்கவில்லை.                 (298)

 

யாரும் அழைக்காமல்

எப்படி நான் மகாத்மாவானேன்-

மலரொடு சேர்ந்த நார்.            (299)

விளைந்த விளைச்சல்கள்

எப்பவுமே வீணாவதில்லை

ஓ... மனிதன் மட்டும்?              (300)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)