கோவைப் பூ (326-350)
மையக் காட்டில் மழை
காடு கடலாய்
மாறும்-
செல்வத்துட்
செல்வம். (326)
முன்னரே
மதிப்பிட்டதை
மறுமதிப்பும்
செய்கின்றோம்;
ஓ...
உதிரி
பாகங்கள். (327)
இருளில்
வெண்ணாடை
நிறம்
மாறாமல் தெரிகிறது
வெளிச்சத்தில்
மட்டும்? (328)
முதலுதவிக்காக
பேச்சு
வார்த்தை நடக்கிறது-
வியாபார
மக்கள். (329)
மாலை
காலையில்
சுறுசுறுப்பாக
இயங்குகின்றது-
பணிக்குப்
போகும் 'பை'. (330)
அழுக்குக்குப்
பயந்து
நகத்தை
ஒட்டவொட்ட வெட்டினேன்
நகப்பொந்தில்
'இரத்தம்'. (331)
மழையுடன்
வாழும் பெண்
சிறு பேச்சால்
பூகம்ப வெடி-
சிலம்பிடையே
மாதவி. (332)
மகரந்தத்தூள்கள்
வண்டுக்காய்க்
காத்திருக்கும்;
அட...
காற்றின்
திருட்டுத்தனம். (333)
முள்
இரண்டும் இணைந்து
ஓடினால்தான்
கடிகாரம்;
ஓ...
இரு
வருவாய்க் 'குடும்பம்'. (334)
பெண்கள்
எத்தனைவிதம்
ஒவ்வொருவரிடமும்
ஒரு முகவரி-
காட்டுக்குள்
மூலிகை. (335)
பூத்தது
எருக்கம் பூ
அழகாய், விட்டு வைக்கவில்லை-
பெரியார்
பிரச்சாரம். (336)
பரந்த
புல்வெளியில்
தினந்தினமும்
நடந்து வந்தேன்
ஒற்றையடிப்
பாதை. (337)
புல்லின்
வைரத்தலை
பனித்துளி
மட்டுமா தருகின்றது?
செடிக்குப்
பாய்ச்சும் நீர். (338)
பீதாம்பரம்
வீசும்
கன்னிப்பெண்
- நெஞ்சக்குமுறல்
ஓ...
புழுங்கல் அரிசி. (339)
உய்வித்துண்பாரும்
உய்த்துண்பாரும்
பயனடைவர்
பாவம், 'தினக்கூலிகள்'. (340)
பாத
அடிச்சுவடு
புதுச்செருப்பில்
நன்றாய்த்தெரியும்-
புதுமனைவி
கோலம். (341)
பலநாள்
பற்பலமுறை
பாறைமீது
நடந்துவந்தேன்-
என்பாதச்
சுவடுகள். (342)
மிகப்பெரிய
குளம்
ஊருக்குள்
சாதி வெறிப்பேய்கள்
குளிக்கின்றது
'எருமை'. (343)
பணிவதே
பெருமையென
வயலில்
குனியும் நெற்கதிர்கள்-
உலையில்
நிமிரவேண்டும். (344)
நொண்டி
வண்டுக்கு
எல்லா
மலர் மீதும் ஆசை-
அக்கரையில்
குறிஞ்சி. (345)
ஆடம்பர
வாழ்க்கை
வரவுக்கு
மேலே செலவு
நெய்விளக்கில்
'விட்டில்'. (346)
நுனியை
மேய்ந்ததாடு
அடியோடு
வாடியதே செடி-
அரசியல்
தலைவர்கள். (347)
நீருக்குள்
நிலவு
இறங்கித்
தேடினேன்;
காணவில்லை-
தலைக்குமேலே
நிலவு. (348)
உயரே
வளர்ந்தாலும்
மண்ணுக்கு
நிழலைத்தரும் 'மரம்'
நாடோடி 'வீடு'. (349)
நிறைய
பனை,
தென்னை
இதமாய
இருந்தது கோடை-
கருத்துகள்
கருத்துரையிடுக