கோவைப் பூ (351-375)
நிலா முற்றத்தில் நெல்
நிலவில் காய
வைப்பதில்லை-
முரண்பாட்டு
வாழ்க்கை. (351)
உருண்டையாய்
உலகம்
பரந்த
கடல்நீர் வழிவதில்லை
திருத்தொண்டர்
'அன்பு'. (352)
நிமிராத
நாய்வால்
நிமிர்த்தினாலும்
சுருட்டிக்கொள்ளும்-
மலரோடு
சேர்ந்த நார். (353)
நற்கொழுமுகை
உடைந்து
திணிநிலைக்
கோங்கம் அணிசெய்தது-
வண்டு
வரவில்லை. (354)
நிலத்திற்குள்ளதுபோல்
மனிதனுக்கும்
உண்டு பட்டா
அடடே....
வரதட்சணை. (355)
தேனுள்ள
பூக்கள்
அர்ச்சனைக்குப்
பறித்துவிட்டார்கள்-
வண்டின்
தவிதவிப்பு. (356)
தென்றலால்
மயங்கிய நான்
நினைவு
வர வருந்துகின்றேனே-
பறக்கின்றன
பூக்கள். (357)
மலையைத்
தொடும் வானம்
தூரத்தில்
மண்ணையும் தொடும்
வானம்போல்
'பரம்பொருள்'. (358)
துளிர்த்தது
இரண்டு இலை
எத்தனை, முதிர்ந்துகாய்ந்துதிர்ந்தன-
உலகில்
மக்கள் தொகை. (359)
தினந்தினங்
கைரேகை
பார்த்துப்பார்த்து
அலுத்துவிட்டது-
உதட்டில்
அட்சரேகை. (360)
ஒருவழிப்பாதையாய்
வானூர்தி
செல்லும் பாதை
திக்கற்ற
காடு? (361)
தானாய்ச் செய்யாது
தூண்டுதலே
அதன் முதலீடு-
காற்றில்
அசையும் இலை. (362)
தனக்குப்
பிறர் நாடி
தரணிக்கே
உதவி செய்வர்-
சவரத்
தொழிலாளி. (363)
எங்கும்
பரந்த புல்
தினந்தினம்
தொடர்ந்து நடந்துவந்தேன்
ஒற்றையடிப்
பாதை. (364)
தலைக்குமேலே
வானம்
நிமிர்ந்து
பார்த்து ஏமாந்தேன்-
அட...
கீழே நீரிலும். (365)
சேற்றினுள்ளே
எருமை
சுகமாய்
வெப்பம் தணிக்கின்றது-
குழம்பியது
குட்டை. (366)
சூரியச்
சந்திரனின்
அற்புத
கோலி விளையாட்டு
அட ... பகலும்
இரவும். (367)
சூறாவளிப்
பயணம்
வரலாறு
படைக்கப்பட்டது-
ஓ...
குடும்பத்தலைவி. (368)
சிரித்துப்
போனாளே
வாழ்வதற்கா
வழக்கிற்கா;
ஓ...
வானில், இடி-மின்னல். (369)
சூரியகாந்திப்
பூ
பொழுதிற்கொப்ப
திசைமாறும்
மனிதப்
பச்சோந்தி. (370)
சாணைக்கல்
சிரிக்கும்
துருபிடித்த
கத்தியைப் பார்த்து-
பட்டை
தீட்டிய பின்? (371)
கோழியா? முட்டையா?
சாப்பிடுவது...
மனப்போராட்டம்?
உலகத்துள்
பரம்பொருள். (372)
முகத்தில்
அரிதாரம்
மேடையில்
இருக்கும் வரைதான்
வான்
நட்சத்திரங்கள். (373)
கொஞ்ச
நேரந்தான்
மூக்கைத்
துளைத்த துர்நாற்றம்-
இரயில்
வண்டியில் 'நான்'. (374)
கூர்மை
போகவில்லை
போருக்குப்
போகாத வாள்-
கருத்துகள்
கருத்துரையிடுக