கோவைப் பூ (376-400)

 உள்ளொன்று வைத்து

புறமொன்று காட்டும் உறவு

பக்குவப்படுத்திய 'தேன்'.        (376)

 

குறுநில மன்னர்கள்

பேரரசுக்குட்பட்டவர்கள்-

புள்ளின் நுனியில் பனி.           (377)

 

குடிக்கத் தயாரான

பாலில்... வந்துவிழுந்ததே ஈ-

திருமணத்தில் ஜாதகம்.           (378)

 

விளக்கொளியில் ஈசல்

மழை சென்றுவிட்டதாய் ஐதீகம்

நேற்றுதித்த காளான்.              (379)

 

காலையில் நிழல்தரும் மரம்

மாலையில் வெய்யில் தருகின்றதே-

திசைமாறும் 'சூரியன்?'           (380)

 

காய்த்து வளர்ந்தது செடி

முதிர்வில் - காற்றின் பிள்ளையாய்?

அரசியல் தலைவர்கள்.            (381)

 

மிதிக்கும் கால்களுக்கு

மதிப்புமிகத்தரும் மிதியடிகள்

வாயிற்படிக் 'காவலன்'.           (382)

 

கள்ளச் சாராயம்

காசுக்குத்தான் கிடைக்கிறது -

மாடியாகும் குடிசை.                 (383)

 

கருவில் வளர்கின்ற

குழந்தைக்குச் சோர்வேயில்லை-

இளமைச் சித்தார்த்தன்.           (384)

 

கற்றாழையில் முள்

குத்தவும் குளிரவும் செய்வதுண்டு

இல்லத்தில் 'மனைவி'.             (385)

 

கண்ணாடி வளையல்

அலங்கோலமாய் உடைத்துவிட்டனரே-

சிரிக்கும் 'வெண்ணாடை?'      (386)

 

ஒன்றில் உருவாகி

மற்றொன்றில் கலவாதது; அட...

நிறமாலைக் கதிர்கள்.              (387)

 

வானில் 'உதயசூரியன்'

பார்த்ததும் கூசிப் பின் தெரிவான்

கற்றோர்தம் 'நட்பு'.                  (388)

 

ஓடையின் குறுக்கே

கல்லொன்று இருந்தது; அடடே...

பிரிந்து சென்றதே நீர்.             (389)

 

எழுதுகோலை மூடினேன்

காற்றில் உலர்ந்துவிடுமென்றெண்ணி-

எழுதுகோலில் துவாரம்.          (390)

 

கரைகின்ற காகம்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்

பல்சமய விருந்து.                     (391)

 

எரியாத விளக்கா

எண்ணையும் திரியும் மாற்று-

அட... தத்துப்பிள்ளை.             (392)

 

எச்சில் பூக்களையும்

பூசைக்குப் பறித்துவிட்டார்கள்-

அட... விதவைத் திருமணம்.   (393)

 

பல்லாயிரம் பூக்கள்

இருந்தாலும், பூபாளக் 'குறிஞ்சி'

வீட்டோடு 'மருமகன்'.             (394)

ஊர்வலத்தில் நடந்து

ஊர்வலத்தை நடத்திவைக்கும்-

புயலின் நடுவே 'மரம்'.            (395)

 

உல்லாசப் பறவை

வரும் புயலால் திசைமாறும்-

நெருப்பில் விழுந்த புழு.          (396)

 

ஏழ்மையின் சின்னம்

எதுவென கண்டுபிடித்துவிட்டேன்

ஓ... அடுப்புப்பூனை.                (397)

 

உதிர்ந்தால் மட்டுமல்ல

செடியிலேயே வாடும் மலர்கள்-

பருவ மங்கையர்?                    (398)

 

உடலின் நாளங்களில்

குருதியின் வேலைநிறுத்தம்...ஆ

உதட்டில் அட்சரேகை.            (399)

 

காலில் புதுச்செருப்பு

கடித்தாலும் விடமாட்டார்கள்

நல்ல 'இல்வாழ்க்கை'.              (400)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)