கோவைப் பூ (401-425)

 இருளை விரட்டிடவே

விளக்கைப் போட்டேன்; விலகியது-

இக்கட்டில் 'ஆந்தை'.               (401)

 

இரவில் மட்டுந்தான்

நடைபாதை வாசி - பகலில்

கட்டிடத் தொழிலாளி.             (402)

 

ஏழையின் நாக்கே

இந்தியாவின் உன்னத 'சகாரா'

குளிர்ப்பெட்டி வாசிகள்.          (403)

 

ஆழமாய் நேராய்த்தான்

புதைக்கப்பட்டது பூமிக்குள்-

சாய்ந்திருக்கும் 'தென்னை'.     (404)

 

ஆடம்பர வீட்டின்

நுழைவாசலில் வறுமைக்கோடுகள்-

நாட்டில் - உழைப்புறிஞ்சிகள்.(405)

 

வானத்தில் மட்டுமா

நிலத்திலும் வாழ்கின்றன - கழுகுகள்

அரசியல் தலைவர்கள்.            (406)

 

அழியும் போது தான்

சுடர்விட்டெரியும் மெழுகுவர்த்தி-

முதிர்ந்து உதிரும் இலை.        (407)

 

அலாங்காரமாய்க் கூவம்

தேர்தல் வந்துவிட்டது; அடடே...

தொண்டனாகத் தலைவன்.     (408)

 

பூவோடு சேர்ந்த

நாரும் மணக்கத்தான் செய்யும்

ஓ... கற்றுச் சொல்லிகள்.         (409)

 

அணை கட்டாதவரை

அனைவருக்கும் உரியது ஆறு-

கழுத்தில் மங்கல நாண்?         (410)

 

அங்காடியின் அழகு

எல்லோரையும் கவர்ந்துவிட்டது-

அட... காலில் செருப்பு.           (411)

 

அந்தரத்தில் மனிதன்

மேலும் கீழும் ஆபத்து-

வாழ்க்கையில் மகிழ்ச்சி.          (412)

 

அலைமோத கட்டினேன்

புயலில் தரைமட்டமானது - ஓ...

கரையில் 'மணல்வீடு'.             (413)

 

செம்புலப்பெயல்நீர்போல்

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தன

ஓ... சவ்வூடுபரவல்.                  (414)

 

அழுக்காய்க் கரைகின்றது

அழுக்கை நீக்குகின்ற சோப்பு-

குடும்பத்தில் 'பெண்கள்'.         (415)

 

ஆத்திரக்காரன் தான்

பொறுமைக்கு இலக்கணம் வகுத்தான்-

வற்றிய கிணற்றில் 'நீர்'.          (416)

 

முகவரியைத் தேடும்

முகவுரை பெற்ற காதலி; ஓ...

பாற்கடலில் 'அமிர்தம்'.           (417)

 

இரயிலின் தலைவிளக்கு

வளையாத நீள் பாதையில் ஒளி-

முயற்சியின் வெளிப்பாடு.       (418)

இரவை விரட்டிடும்

வீதியோர மின்விளக்குகள்; அட...

தடங்களுக்கு வருத்தம்.            (419)

 

பாதை ஓரத்தில்

விரசங்கள் விலைபேசப்படும்

பாவம், வறுமைத்தாய்.            (420)

 

இல்லாத அழுக்கைச்

சேர்த்தே கொண்டுவரும் குருதி-

நுனி முள்ளில் அழுக்கு.           (421)

 

உணர்வின் நம்பிக்கை

பிம்பங்கள் உண்மையாகும்-

திரையரங்கத்துள் 'நான்'.         (422)

 

மாட்டுச் சந்தையில்

ஆளாளுக்கொரு விலைப்பேச்சு

மணக்காலத்தில் 'பெண்'.         (423)

 

உயிர்தரும் வேருக்கு

உதிர்ந்து உரமாகும் இலைகள்-

நன்றி உள்ளது 'நாய்'.              (424)

 

உள்ளே புழுங்குவதைப்

புகையாக, வெளியே காட்டும்-

அட... செங்கற் சூளை.            (425)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)