கோவைப் பூ (451-475)
சிகரத்தின் உச்சியில்
தோரண
அலங்காரங்கள்-
அடிவாரத்தில்
'நான்'. (451)
சீரான
எழுதுகோல்
இறுதியில்
பிரகாசமாய் எழுதும்-
சாகும்
முன் 'ஆன்மா'. (452)
ஒவ்வொரு
மேடையிலும்
சமத்துவங்களையே
பேசுகின்றனர்
கொல்லைப்புறம்
'வாசல்'. (453)
செடியில்
பிறந்தது மலர்
வதங்கினாலோ
தானாய் உதிரும்-
ஓ...
அழுகிய பலாக்கனி? (454)
சேற்றுத்
தாமரைகள்
அர்ச்சனைக்குத்
தயாராகின்றன-
குப்பையில்
மாணிக்கம். (455)
வந்த
கடிதத்தில்
அனுப்புநர்
முகவரி எங்குமில்லை
உலகத்தில்
'பரம்பொருள்'. (456)
தழுவும்
பனங்குருத்து
தலைவிரித்தாடும்
பனையோலை
காலச்
சூழலில் 'நான்'. (457)
தனித்தனி
முகவரிகள்
பேதமில்லாத
கூட்டுவாழ்க்கை-
மனிதனின்
உடற்கூறுகள்? (458)
வெய்யிலில்
சுடர்விளக்கு
வெளிச்சத்தைத்
தந்தென்ன பயன்?
நீதிமன்ற
வழக்குகள். (459)
திக்கெல்லாம்
கண்கள்
கணைகள்
ஒருதலையாய் மாறும்-
செய்தி
வாசிப்பவள். (460)
தீர்ந்த
கடனுக்கு
சுடுகாட்டில்
வட்டிதரும் மகன்-
கொள்ளிக்
கட்டைகள். (461)
அத்திப்பூ
மாலை
ஏழையின்
கழுத்தில் விழுந்தது.
தேர்தல்
வாக்குறுதி? (462)
தூங்காமல்
விழித்து
நேராய்
வளர்க்கப்பாடுபட்டேன்-
இயல்பாய்
வளர்ந்தது 'பனை'.(463)
தேயும்
கரித்துண்டு
அழிவில்லையென்று
சிரிக்கின்றது-
சுவரில்
விளம்பரங்கள். (464)
சட்டசபைக்
கலகம்
அடிஉதைக்குப்பின்
வெளிநடப்பு
ஓ...
பாகப் பிரிவினை. (465)
நகத்தைக்
கடித்த பல்
விரலையும்
எச்சில் செய்தது-
நகப்பொந்தில்
அழுக்கு? (466)
நாளைக்கு
என்று
நாள்பட
வைத்திருக்க முடியுமா?
நாள்பட்ட
கிணற்றுநீர். (467)
ஒவ்வொரு
பூவிலுந்தான்
தேனை
உண்ணுகிறது வண்டு
வீட்டிற்குள்
'பரத்தை'? (468)
நிலத்தில்
பதுங்கும் புலி
பாய்வதற்குத்
தயாராகின்றது-
மின்சாரக்
கம்பிகள்? (469)
நிழலைத்
தந்த இலை
உதிர்ந்து
பட்டமரமாகும்;
அட...
இலைக்கு
நிழல்தரும் மரம். (470)
ஏழ்மையின்
உதட்டில்
வறுமைக்
கோடுகளே அதிகம்
ஏழையின்
சிரிப்பு? (471)
நின்றதோ
மின்சாரம்
எல்லாமும்
நின்றது;
ஆனால்...
அவசர
மின்விளக்கு. (472)
நீர்
நிரப்பும் தொட்டி
அடியில்
சிற்றெறும்பின் முட்டை-
சாக்கடைச்
சமுதாயம். (473)
இராட்டையில்
பருத்தி
நூலானால்தான்
தறியில் துணி
தாய்-சேய்
நலவிடுதி. (474)
நெஞ்சின்
குமுறல்கள்
நெருப்பாய்க்
கண்ணீர் வெளிப்பாடு-
கருத்துகள்
கருத்துரையிடுக