கோவைப் பூ (476-500)
பக்திப் பிரதேசம்
எங்கும்
மண்டியிட்ட வணக்கம்-
வறுமை
சிறைச்சாலை. (476)
கண்ணகியின்
சிலம்பு
நெடுஞ்செழியனிடம்
பேசியது
நெருப்புக்குள்
'மதுரை'. (477)
பந்தலில்
மின்விளக்குகள்
மிகுந்தும்
குறைந்தும் ஒளிகாட்டும்-
வான்
நட்சத்திரங்கள். (478)
பலவித
எழுத்துக்கள்
புள்ளியே
அனைத்தெழுத்திற்கும் முதல்-
ஆத்மாவுள்
'பரம்பொருள்'. (479)
குண்டூசியின்
எல்லாப்
பக்கங்களும்
முகத்தைக்காட்டும்-
அடடே... 'ஐக்கூ'க்கள். (480)
காட்டுப்
பாதையில்
காற்றடித்தும்
விலகாத முள்
வேகமாய்த்
தேர்ச்சக்கரம். (481)
பார்வை
குன்றியது
உதவிக்கு
வந்தது கண்ணாடி-
தாய்க்குப்
பின் தாரம். (482)
புத்தகத்தைத்
திருத்தினேன்
எப்படியோ
சரியாகிவிட்டது-
அடித்தல்
அழியாது. (483)
வாசமில்லை
எனினும்
வனத்துப்
பூக்களிடம் வண்டுகள்
எல்லாப்
பூவிலும் 'தேன்'. (484)
புள்ளி
வட்டமாகலாம்
ஆரமே
வட்டத்தின் மூலம்-
சமுதாயத்தில்
'பெண்'. (485)
பூமிக்குள்
விதையை
ஆழமாகப்
பதியச்செய்தேன்-
சிரிக்கும்
'தரிசு நிலம்'. (486)
பிரம்மாவா
எழுதினான்
வாழ்வின்
ஆயுட்காலத்தை
உணர்ச்சியின்
சீரமைப்பு. (487)
பேய்க்காற்றில்
புழுதி
எத்தனைபேர்
கைகள் கண்ணில்-
பாவம், தேன்கூடு. (488)
மதுவிலக்குச்
சட்டம்
முறையாக
அமுல்படுத்தப்பட்டது-
கள்ளச்
சாராயம். (489)
சுவீகார
பந்தம்
மக்களுக்கு
மட்டுந்தானா?
புலிக்கூண்டில்
ஆடு. (490)
மனப்போராட்டம்
உண்பது
கோழியா?
முட்டையா?
உருண்டையாய்
உலகம். (491)
மின்னலாய்
மினுக்கிறது
உறையில்
உறங்கும் பாசறைவாள்-
சிரிக்கும்
சாணைக்கல். (492)
தினமும்
ஒரு அழைப்பிதழ்
அனுப்பும்
கல்லூரி மாணவன்
புத்தகத்தில்
காதல்? (493)
முல்லை
வாசமில்லை
என்றாலும்
ஒழுக்கத்தின் தலை-
சிரிக்கும்...
குறிஞ்சிப் பூ. (494)
மூடியகண்
திறந்தது
எங்கும்
வெண்மைப் பிரவாகம்-
தண்ணீருக்குள்
'நான்'. (495)
வரிசையாய்
எறும்பு
எல்லோரும்
பின்பற்றவேண்டும்
சலுகையில்
'பதவி'? (496)
யார்
சொல்லிக்கொடுத்தார்
சேவலுக்கு
விடியப்போவதை-
பஞ்சாங்கப்
பேய்கள். (497)
வரிசையாய்ச்
செல்லும்
மனிதர்களைக்
கண்டு வியந்தேன்-
ஒற்றையடிப்
பாதை. (498)
எளிதான
வேலை
வெள்ளாடையை
அழுக்காக்கல்
அட...
விதவை மறுமணம்? (499)
வாழ்கின்றவன்
மனிதன்
'உம்'
உலகம் வாழ்கிறதாமே-
கருத்துகள்
கருத்துரையிடுக