கோவைப் பூ (501-525)

 விதையில்லையாயினும்

கிளையினாலே வெற்றிலைக்கொடிகள்-

நல்ல சமுதாயம்.                       (501)

 

தொழிற்சாலையில் கை

வேலை செய்தால்தான் ஊதியம்

கால் காக்கும் 'செருப்பு'.           (502)

 

விளைச்சலைப் பெருக்குவதற்கு

விரல் இடுக்கில் புகைகிறது புகை-

புகைகின்றது 'நெஞ்சு'.             (503)

 

வேகமாய்ச் செல்கிறதே

சிதறல்கள் இடமாற்றம்; அட...

சாலையில் பேருந்து.               (504)

 

அமாவாசை நாளில்

வானமும் பூமியும் நண்பர்கள்-

எரியாத விளக்குகள்?               (505)

 

அழகாய் நாற்காலி

உட்காருவதற்குப் போட்டி-

நசுங்கியது 'எறும்பு'.                (506)

 

என் நாட்குறிப்பேடு

நினைவுகளை மலரச்செய்தன

மக்கிப்போன 'தாள்'.                (507)

 

அறம்பொருள் இன்பமெல்லாம்

வீடு பேற்றில் கண்டுவிட்டேன்-

ஒப்பாரி 'மனைவி'.                   (508)

 

ஆத்மாவை எழுப்பு

நிச்சயம் தவறுகள் விடுதலைபெறும்-

உனக்குள் ஒருவன்.                  (509)

 

மேய்வதாய்ச் சொன்னார்கள்

ஓடிச்சென்று பார்க்கின்றேன்

மணிலா வயலிலாடு.               (510)

 

இரயிலின் நெம்புகோல்

வெளியே தெரிந்தாலும்-சக்கரம்

தண்டவாளத்தில் தான்.           (511)

 

இராட்டையில் பருத்தி

நெசவாளர் கொடுத்தார் ஆடை-

கடைசியில், தாய்க்கு மகன்?   (512)

 

எதிர் எதிராய் இருந்தும்

துன்பம் வர... சேர்ந்தே சாகும்

கிளையில் பச்சிலைகள்.          (513)

 

இனிப்பே காட்டும் தேன்

உள்ளுக்குள் கசப்பையும் தரும்-

போலி மனிதர்கள்.                   (514)

 

உணவுக்குப் பிறகுநீர்

செரிமாணம் நன்றாய் நடக்கும்-

நாற்று நட்ட வயல்.                  (515)

 

அடங்காத இதயம்

இமைகள் மூடியும் அடங்காது

சிம்மாசனக் 'கனவு'.                 (516)

 

உயிர்ப்பிணங்களைப் புதைக்கும்

மனிதன் வயிறே 'சுடுகாடு'-

கொல்லாமைக் கொள்கை?     (517)

 

உன்னதமாய்ச் சித்திரம்

உன்னிப்பாய்க் கவனித்தேன்; அட...

ஆழப் பதிந்தது 'மனம்'.            (`518)

 

சிலரின் ஆவேசம்

புதிய வீடும் எரிகின்றது

இரவில் 'தேன்கூடு'.                 (519)

 

எங்கெங்கு வெளிச்சம்

இருள்மாறினாலும் அரசாட்சி-

மரப்பொந்தில் 'பாம்பு'.            (520)

 

எத்தனை கட்டைகள்

எவ்வளவு சல்லிக்கற்கள்-

இரயில் தண்டவாளம்.             (521)

 

எழுதுகோலின் மூடியில்

எழுத்து... பொறிக்கப்பட்டிருக்கும்

வீட்டில் பெயர்ப்பலகை.         (522)

 

எல்லா விதைகளுமே

பக்குவமாக முளைக்கின்றது-

எஜமானனின் கட்டளை.         (523)

 

என்ன ஆச்சர்யம்

காலில் மட்டுமல்ல செருப்பு-

முடவன் விரல் இடுக்கில்.       (524)

 

ஒற்றுமையாய்ப் பறவைகள்

எப்படி? வானில் பறக்கின்றன?

ஊடகத்தில் 'காற்று'.                (525)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)