கோவைப் பூ (51-75)
இலை, சருகானாலும்
உரமாய்
மதிக்கப்படுகின்றது
பொதுத்தேர்வில்
மாணவர்? (051)
பெட்டி
முழுக்கப் பணம்
பூட்டைப்
போட்டுத்தான் மூடினேன்-
சுட்டது
அகல்விளக்கு. (052)
உடுத்தாத
ஆடை
பேழையில்
காட்சிப்பொருளாய்
ஈரமாய்
மணல்வீடு. (053)
புனலிக்கொடி
வீழ்ந்து
மணலை
அலங்கரித்து இருக்கும்-
தொடுக்க
இ(ல்)லையே நார். (054)
உரம்
போட்டு வளர்த்தேன்
நன்றாய்த்தான்
வளர்ந்தன மரங்கள்-
அடடே.....
விறகுவெட்டி. (055)
பூக்களில்
மகரந்தம்
வண்டின்
துணையால் மீண்டும் பூ-
ஓ...
கள்ளக்காதல்? (056)
உடைந்ததே
தண்ணீர்க்குடம்
பள்ளமான
ஓட்டுக்குள் நீர்
அரசியல்
கட்சிகள். (057)
புயல்
காற்றினாலே
பாதை
எதுவென தெரியவில்லை-
குத்தி
நின்றது முள். (058)
உயர
வளர்ந்தாலும்
தென்னைக்கு
மண்ணில் உணவு
தாய்க்கென்றும்
பிள்ளை. (059)
புல்லாங்குழல்
மட்டுமா
எதுவெல்லாந்
தருகிறது மூங்கில்-
கூடைக்குள்
தேசம். (060)
அரிசி
மூட்டைகள்
பசியோடு
காவல்காரன்
உல்லாசமாய்
'எலிகள்'. (061)
பிறந்தவுடன்
ஊமை
வளர்ந்த
பின்பு குருடனாய்-
நன்றி
உள்ளது நாய். (062)
உயரே
வாழ்ந்தாலும்
தேய்காய்
கீழே விழவேண்டும்
சமத்துவம்
பேசும் 'மண்'. (063)
பிறவிப்பயன்
பெற்றதாய்ப்
பேசிக்கொண்டது
கூர் அரிவாள்-
களத்தில்
நெல்மணிகள். (064)
உள்ளதிலே
ஒன்றி
உயிர்வாழும்
ஒழுக்கமுடையவர்
ஒட்டுண்ணி
மனிதர். (065)
பழசான
காற்றில்
சாக்கடையின்
விவகாரங்கள்;
உம்...
நகத்துக்குள்
அழுக்கு. (066)
புலிகள்
பதுங்குவதால்
கோழைகளென்று
கருதவேண்டாம்-
அட...
உத்தமத் தலைவன்? (067)
பழுத்து
இனிக்கும் பழம்
வீணாகாமல்
பார்த்திருப்போம்-
மூலையில்
தாத்தா? (068)
உள்ளழகை
மறைத்து
கண்ணுக்கு
மையழகூட்டுவர்
தலையில்
வலி நிரந்தரம். (069)
பயன்படுத்தப்பட்டது
அடைவில்
வீணாய்த் தூங்குகிறது-
துருபிடித்த
கத்தி. (070)
பரந்த
ஒற்றுமை
பிரியும்போது
தனிக்குழுக்கள்-
சொட்டும்
மழைத்தண்ணீர். (071)
ஊளையிட்டது
நாய்
இன்னொரு
ஜாலியன்வாலாபாக்
குண்டு
கலாச்சாரம். (072)
படித்தேன்; அடிக்கோடு
சில
இட்டு மூடினேன்;
பிரித்தேன்-
வரிகளே
என்பாடம். (073)
தேனுண்ட
வண்டு
பூவருகே
மயங்கி விழுந்தது-
பூக்களின்
அரசாட்சி. (074)
பணத்தோட்டம்
அழிந்தது
உள்ளே
புகுந்தது குள்ளநரி-
கருத்துகள்
கருத்துரையிடுக