கோவைப் பூ (526-550)
ஒருதுளித் தேன் சிதற
எங்கு
இருந்து வந்தன இவை?
வட்டமிடும்
'எறும்பு'. (526)
கட்சித்
தோரணங்கள்
முரசு
கொட்டும் கொள்கைகள்-
என்றும் 'பாதசாரி'? (527)
ஆடு
புகாதவாறு
சுற்றிலும்
வேலி எழுப்பினார்கள்
வேலி
ஓரம் 'தழை'. (528)
கதை
வசனம் இயக்கம்
பாத்திரம்
எல்லாமே நாம்தான்-
உலகத்துள்
பரம்பொருள்? (529)
கவிஞன்
கண்களுக்கு
உள்ளுவதெல்லாம்
உயர்வுள்ளல்-
வாழ்க, மகாத்மாக்கள். (530)
தெறிக்கும்
மழைத்துளிகள்
முள்ளில்
தற்கொலை செய்துகொள்ளும்
பெற்றோர்
உபதேசம். (531)
காட்சிகளைக்
கண்டதும்
எழுத்தில்
கொடுக்கின்றவன் கவிஞன்-
பாவம், ஆய்வாளன். (532)
காலில்
புதுச்செருப்பு
இன்னுமில்லை
பாதச்சுவடு-
வெண்ணிறச்
சேலைகள். (533)
வரப்போரத்
தண்ணீர்
வீணாவதால்
தென்னை வளர்த்தேன்.
என்...
சவலைப்பிள்ளை. (534)
காற்றின்
செய்திகளை
உடனுக்குடன்
வாசிக்கும்;
அட...
முற்றத்தில்
தென்னை. (535)
குத்த, வரும் இரத்தம்
அழுக்கையும்
சேர்த்தா கொண்டு வரும்
முள்
நுனியில் அழுக்கு. (536)
வேகமாக
மிதித்தேன்
மிதிவண்டி
விரைவாய்ச் சென்றது
நெஞ்சில், முயல்-ஆமை. (537)
கூட்டு
வாழ்க்கைதான்
தேசியத்தின்
ஒருமைப்பாடு-
தனித்தனி
முகவரிகள். (538)
கைக்குட்டை
அழுக்கு
நமக்கே
வெறுபபைத் தோற்றுவிக்கும்-
பாவம், சுமைதாங்கி. (539)
வாழ்ந்தவரைப்
பார்த்து
வாழ்பவர்கள்
அழுகின்றார்கள்
சுடுகாட்டில்
'தோட்டி'. (540)
கொழுந்து
விட்டது மரம்
முதிர்வில்
காற்றின் பிள்ளையாய்-
அரசியல்
தலைவர்கள். (541)
சமூக
அமுதசுரபி
இன்னும்
வற்றவில்லை;
சுரக்கும்-
நாட்டில்
மக்கள்தொகை. (542)
ஓரிடத்தில்
அழுத்தினால்
சுடர்விடுகின்ற
பல விளக்குகள்-
உன்னத 'ஐக்கூ'க்கள். (543)
இருகிய
கற்றாழை
எண்ணெய்விட்டு
இளகாக்கினேன்
வழிகின்றது
'கசடு'. (544)
சிதறாத
மனதில்
தங்கியிருந்தது
கோயில்புறா-
மனம், செம்புலப்பெயல்நீர். (545)
சீவலில்
வலியுண்டாம்
எழுதும்போது
இன்பம் தரும்-
பிள்ளைப்
பேற்றில் 'தாய்'. (546)
மங்கலாய்த்
தெரிவதாலே
கண்ணைக்
கசக்கிப் பார்க்கின்றேன்
உச்ச
நீதிமன்றம்! (547)
செத்த
பிணத்திற்குப்
பிரச்சாரம்
செய்கின்றோம்;
அட...
ஒப்பாரிப்
பாட்டு. (548)
தங்கையின்
திருமணம்
மகனை
விலைக்கு விற்றுவிட்டேன்-
கரம்பு
நிலத்தில் நெல். (549)
உலர்ந்த
நூலின் மேல்
தண்ணீரைத்
தெளித்து வைத்தேன்
கருத்துகள்
கருத்துரையிடுக