கோவைப் பூ (551-575)
தழுவும் மனைமட்டை
தலையில்
தன்குணம் காட்டுகின்றது-
தலைவிரியாய்
மட்டை. (551)
தன்தாள்
வணங்காத்தலை
நேரம்
வரும்போது குனியும்-
கழுத்தளவே
வாயில். (552)
மொட்டைக்
காத்தேன்
பூத்ததும்
தேன் எடுத்தது வண்டு
பறந்தது...
கூண்டுக்கிளி. (553)
திசை
நான்கும் வேதம்
பரம்பொருளே
மூல கர்த்தா-
திசைகாட்டும்
கருவி. (554)
தும்பிக்குச்
சிறகுகள்
பறப்பதற்கு
மட்டும் அல்ல-
உலகவொற்றுமைக்
கழகம். (555)
காந்தர்வத்
திருமணம்
இன்றளவும்
நடைபெறுகின்றது
அனாதை
இல்லங்கள். (556)
தூசு பறக்கவில்லை
ஓ...
மழையால் நனைந்த பாதை-
பணிக்குச்
செல்லும் பெண். (557)
தேய்த்து
வரும் காலணி
யாரென்று
புரிந்துவிட்டது-
புரண்டு
நிற்கும் மனம். (558)
குடிகாரன்
பேச்சு
பொழுது
விடிந்தால் போச்சு- ஓ...
மாங்கொண்டை
'வண்டு'. (559)
நகல்
எடுக்க நினைத்தேன்
நிழல்
வந்து மறைத்துக்கொண்டது-
நிஜத்தைக்
காணவில்லை. (560)
நாற்றிசையும்
வெள்ளம்
நடுவில்
ஒரு சிறிய துவாரம்-
பிண்டத்துள்
அண்டம். (561)
இனிக்கும்
மாங்கனியை
இறுதிவரைச்
சுவைத்துண்டேன்...ஓ
வண்டுக்கு
விடுதலை. (562)
நிலத்தைச்
சுரண்டும் கை
கரம்பு
நிலத்தையும் விடவில்லை-
விரல்
நகப்பொந்தில் மண். (563)
நிழல்
தேடிய கால்கள்
உறங்குவதற்கு
இடங்கேட்டது-
ஒண்டவந்த
பிடாரி. (564)
பகலில்
காய்ந்த தரை
இரவில்
வேர்க்கின்றதே;
எப்படி?
நெஞ்சக்
குமுறல்கள். (565)
நீக்கியும்
நீங்காமல்
பேருந்தில்
சமசரம் பேசுவோம்-
பெண்களுக்குத்
தனியிடம்? (566)
நீர்ப்படராத
தாமரை
நிலம்படத்
தானாய் ஒட்டும் மண்-
மனித
ஒட்டுண்ணி. (567)
கடலோடு
ஆறு
இரண்டரக்
கலந்துவிட்டது;
பின்னர்-
மழையாகக்
'கடல்நீர்'. (568)
நெய்விளக்கில்
அழியும்
விட்டில்
பூச்சிகள் மகிழ்கின்றன-
மூடிய
சொர்க்கவாசல்? (569)
பசுமையாய்
வளர
பாத்தி
கட்டி உரமிட்டேன்-
வேருக்கு
'வெந்நீர்'? (570)
எதுவுமில்லை
என்பதும்
என்னதான்
இல்லை என்பதுவமே-
'ஐக்கூ'க் கவிதைகள். (571)
உடைந்த
மோதிரக்கல்
பலவாய்ப்
பொலிவுற்று நின்றன
அட...
கூட்டுக்குடும்பம்? (572)
பம்பரத்தின்
சுழற்சியில்
எத்தனை
எத்தனை வட்டங்கள்-
தேர்தல்
அறிக்கைகள். (573)
பலவித
வண்ணங்கள்
கூட்டு
முயற்சியில் ஒன்றுபட்டன-
சிவக்கும்
தாம்பூலம். (574)
பேருந்துப்
பயணம்
சிறுநீரை
அடக்கிக்கொண்டேன்
இழவுவீட்டில்
'அழுகை'. (575)
கருத்துகள்
கருத்துரையிடுக