கோவைப் பூ (601-625)
வேர்க்கும் அந்திவானம்
முத்துமுத்தாய் நட்சத்திரங்கள்-
புள்ளின் நுனியில் பனி. (601)
வீடுதொறும் வாசல்
வாசல்தொறும் கதவும் பூட்டும்-
ஓ... விடுதலைப் பொன்விழா?(602)
கனகாம்பர விதைகள்
நீர்ப்பட்டதும் வெடித்துச் சிதறும்
குடிசைக்குள் 'புரட்சி'. (603)
விரல் பட்டது மட்டுமா?
மக்கியுரமாக்கப்படுகிறது?
மாணிக்க மனிதர். (604)
வானச் சமுதாயமும்
விட்டுவிடவில்லை, மதவெறி;
அட...
இன்னலில் வருவதே இடி. (605)
சுவைக்கின்றதே சர்க்கரை
எவ்வளவு கரும்பு அழிந்தன
அடடே... மறுபிறவி. (606)
வழியாய் மண்பாதை
சுவடாய், நடந்தவரின்
பாதங்கள்-
பூக்காது, அத்தி. (607)
யார் போட்டது பூட்டு
சாவி இல்லாமலே திறந்ததே-
பருவப் பெண்ணின் 'மனம்'. (608)
திரைப்பட விளம்பரங்கள்
மதில் சுவரை அலங்கரித்திருந்தன
நடிகையின் 'கணவன்'? (609)
மெதுவாகத் தொட்டேன்
அப்படியும் என்ன சத்தம்-
சலசலக்கும் கீற்று. (610)
முள் இரண்டும் இணைய
ஓடினால் நலமிகு கடிகாரம்-
இரயில் தண்டவாளம்? (611)
மேடேறும் போது
வழுக்கின் உதவிக்கு வரும் கை
ஆலமர விழுதுகள். (612)
முகவரி மாற்றத்தால்
திரும்பி வந்துவிட்டது கடிதம்-
கால்கடுக்கும் செருப்பு. (613)
மாடியின் விளக்கெல்லாம்
அணைந்தால்தான் குடிசைக்கு ஒளி-
யானையுண் விளாங்கனி. (614)
ஆற்றின் நடுவே கல்
பிரிந்து உடனே இணைந்தது நீர்
மணமுறிவு வழக்கு? (615)
மரம் வளர்ந்தாலும்
எப்பவும் மண்ணை மறப்பதில்லை-
ஆறறிவு மனிதர்? (616)
பைசாவில் தேசியம்
பகலும் இரவும் இருபக்கம்-
அண்டத்தில் பூமி. (617)
முள்ளில் படர்ந்தது கொடி
எடுக்காதே. அப்படியே விடு
சீர்த்திருத்தப் பள்ளி? (618)
பூவிழி வாசலிலே
பாவம், சோதனைத்
துப்பாக்கி-
ஆம்... தீவிரவாதி. (619)
புறந்தூய்மையானவன்
சேற்றில் குளித்தாலும் ஒதுக்கான்-
எருமை தருமே 'பால்'. (620)
பிணமும் கொலை செய்யும்
இது எப்படி சாத்தியமாகும்?
மீனவன், கைத்தூண்டில். (621)
புத்தகமானாலே
ஏற்றத்தாழ்வை விலக்குந் தாள்கள்-
சமுதாயக் கட்சிகள்? (622)
பிரம்மா எழுதவில்லை
வாழ்வின் கால கட்டத்தை-
உணர்ச்சியின் சீரமைப்பு. (623)
சட்டையில் ஊக்கு
விளிம்புகளை இணைக்கின்றது; அட!
ஆற்றில் தொங்குபாலம். (624)
பல் மறைக்கவா உதடு
தவறிய சொல்லால் நாக்குமுதடும்-
கருத்துகள்
கருத்துரையிடுக