கோவைப் பூ (626-650)
பயணத்தில் பார்த்தவள்
தினந்தினமும் தொடர்கின்றாள்; ஓ...
நினைவின் அலைவோசை. (626)
ஆன்மா எப்பொழுதும்
யாவருக்கும் தூங்குவதில்லை
உடலின், அணிச்சைச்செயல். (627)
படித்துறையில் வண்ணான்
அலசி வெளியேற்றும் அழுக்கு-
மீனுக்கு உணவு. (628)
நெருப்பு அழுகின்றது
மடைதிறக்கும் கண்ணில் கண்ணீர்-
பிணத்தருகே 'மக்கள்'. (629)
உயர வீசிய கல்
எவ்வளவு தூரம் செல்லும்
ஓ... புவியீர்ப்பு விசை. (630)
நீர் உண்ணும் பாசி
நீரோடு மட்டும் வாழும்-
கணவனோடு மனைவி. (631)
நீரில் இறங்கிய நாய்
கரைக்கு வந்ததும் களிப்படைந்தது-
தீயில் விடப்படும் நெய். (632)
வயலோரம் வேலி
முதிர்ந்ததும் எட்டிப்பார்க்கும் கதிர்
பருவ மங்கையர். (633)
நிறம் மாற்றச் சொல்லி
சந்தைக்கு வந்தது வெண்மலர்-
சருகாய்ச் சமுதாயம். (634)
நிலமெங்கும் நிலவு
பகலும் இரவும் பகலிலேயே-
வானில், இரவல் நிலா. (635)
சிகரெட்டின் சாம்பல்
விரலால் தட்டியா உதிருகின்றது
கிளையில் முதிர்ந்த 'இலை'. (636)
நாற்று போல் மக்கள்
'உம்'
எத்தனை எத்தனை மொழிகள்-
பூப்பதெல்லாம் பழமா? (637)
நடந்து போகின்றேன்
மேடும் பள்ளமும் தொடர்கின்றது-
நெஞ்சின் அலை ஓசை? (638)
முள் குத்தும் போது
எருக்கம் சிலதுளி பால்வடிக்கும்
பிணத்தருகே 'கண்ணீர்'. (639)
தேவையுள்ள வரை
அதிகமான கண்காணிப்பு-
ஓ... குலவிக் கூடு. (640)
தூய்மை இல்லாதது
எப்படியோ சகித்துக்கொள்கிறோம்-
எருமை தந்ததே 'பால்'. (641)
கால்கள் போனாலும்
தலையை மட்டும் காத்துக்கொள்
முச்சக்கர வண்டி. (642)
துயரப்பெண் கண்களில்
தூசு அகற்றப்படவில்லை-
விதவை, நன்செய் நிலம். (643)
திட்டுக்களாய் வானில்
மேகங்கள்... எட்டிப்பார்க்கும்-
புவியெல்லாம் சோலை. (644)
நன்றாய்த் துடைத்துத்தான்
புண்ணுக்கு மருந்திடவேண்டும்
ஓ... மனநலக் காப்பகம்? (645)
தன்மான மனிதர்
எப்பவுமே முயற்சியுடையார்-
தொற்றுத் தாவரங்கள். (646)
தளும்பாத நிறைகுடம்
குடத்தில் மிகச்சிறிய வெடிப்பு-
அடிச்சறுக்கும் யானை. (647)
நிலைப்படுத்தும் பார்வை
தன்வயப்படும்... விரும்பியதும் நடக்கும்
ஆத்மாவின் ஸ்பரிசம். (648)
தண்ணீர்க்குடம் உடைந்தது
ஓடுகளில் எஞ்சியது நீர்-
உண்மை சாவதில்லை. (649)
செம்புலப் பெயல்நீர்போல்
கலக்கும் அன்புடை நெஞ்சங்கள்-
நல்ல மணமக்கள். (550)
கருத்துகள்
கருத்துரையிடுக